கன்னியாகுமரியில் மூன்று பிரம்மசாரிகள் போட்டி
நாகர்கோவில்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் முக்கிய கட்சிகள் சார்பில் மூன்று பிரம்மச்சாரிகள் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் வருகிற 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 17ம் தேதி தொடங்கியது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நேற்று முன்தினம் 18 பேர் மனு தாக்கல் செய்திருநதனர்.
மனுதாக்கலின் கடைசி நாளில் 10 பேர் மனு தாக்கல் செய்தனர். அங்கிகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர், பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள் என மொத்தம் 28 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுக்கள் நேற்று பரீசலனை செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை கடைசி நாளாகும். நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், தேமுதிக வேட்பாளர் ஆஸ்டின், இந்து மகாசபை கட்சி பாலசுபபிரமணியன் ஆகியோர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாக இருப்பவர்கள்.












Click it and Unblock the Notifications