தமிழகத்தில் 334 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு - நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்
சென்னை: தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வேட்பு மனு பரிசீலனை நேற்று முடிவடைந்தது. மொத்தம் 334 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நாளை மாலைக்குள் வேட்பு மனுக்ளை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மொத்தம் தாக்கலான வேட்பு மனுக்களில் 941 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 334 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 27ம் தேதி மாலை 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
சென்னை மாவட்டத்தில், மொத்தம் 49 வேட்பாளர்களின் மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன. 116 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
அனைத்து முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
மத்திய சென்னையில் மொத்தம் 62 மனுக்கள் தாக்கலாகின. இதில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டன. மற்றவை நிராகரிக்கப்பட்டன.
தென் சென்னையில் 62 மனுக்கள் பெறப்பட்ன. 48 ஏற்கப்பட்டன. 14 நிராகரிக்கப்பட்டன.
வட சென்னையில் 41 மனுக்கள் பெறப்பட்டன. 31 ஏற்கப்பட்டன. 10 நிராகரிக்கப்பட்டன.
நெல்லை..
நெல்லை, தென்காசி தொகுதிகளில் 33 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
நெல்லை, பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், சுயேட்சைகளும் மொத்தம் 35 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் மாற்று வேட்பாளர்கள், சுயேட்சைகள் உள்பட 14 பேர் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 21 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இநதிய கம்யூ, காங், தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகள், சுயேட்சைகள் சேர்த்து 17 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதில் மாற்று வேட்பாளர்கள், சுயேட்சைகள் மனு தள்ளுபடி செய்யப்பட்டு 12 பேர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடியில்...
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகளும், சுயேட்சைகளும் சேர்ந்து மொத்தம் 32 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 16 மாற்று மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 16 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
கன்னியாகுமரியில்...
கன்னியாகுமரியில், 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இத்தொகுதியில் 39வது முறையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த சுயேச்சை வேட்பாளர் நாகூர் மீரானின் வேட்பு மனு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியதால் நிராகரிக்கப்பட்டது.
(இவர் திருவனந்தபுரம் தொகுதியில் ஏப்ரல் 16ம் தேதி நடந்த தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது)
கோவையில்..
கோவையில், 39 மனுக்கள் பெறப்பட்டன. 29 மனுக்கள் ஏற்கப்பட்டன.
பொள்ளாச்சி தொகுதியில், 29 மனுக்கள் பெறப்பட்டன. 24 ஏற்கப்பட்டன.
மதுரையில்..
மதுரையில் 29 மனுக்கள் பெறப்பட்டன. 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மற்றவை ஏற்கப்பட்டு விட்டன.
ஒரு தொகுதியில் 16 வேட்பாளர்களுக்கு மேல் இருந்தால், அங்கு கூடுதலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்படும் என்றார் நரேஷ்குப்தா.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications