உண்ணாவிரதம் உச்சகட்ட நாடகம்:வைகோ

ஊட்டி அருகே கூடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் கருணாநிதி இதுவரை நடத்திய நாடகங்களில் இந்த உண்ணாவிரதம் தான் உச்சகட்ட நாடகம். கருணாநிதி அவரது குடும்பத்துக்காக காங்கிரசுடன் சேர்ந்து தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டார்.
போரை நிறுத்த வேண்டும் என இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஏதாவது உத்தரவு அனுப்பியதற்கான ஆதாரம் ஒன்றை காட்டினாலும், நான் தீவிர அரசியலில் இருந்து விலகி விடுகிறேன்.
கடந்த இருண்டு நாட்களாக இலங்கை ராணுவம் ரசாயண குண்டுகளை அதிகஅளவில் பயன்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டு காலமாக இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி அளித்து வருகிறது. அதைத் தடுக்க கருணாநிதி என்ன செய்தார். இப்போது ஏன் இந்த திடீர் உண்ணாவிரதம்?.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழக மக்களை உலுக்கிப் போட்டுள்ளது. இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் மிகப் பெரிய அடி விழும், படு தோல்வியைச் சந்திப்பார்கள்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், திமுக அரசும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டனர், காக்கத் தவறி விட்டனர் என்ற உணர்வு தமிழக மக்கள் மனதில் விஸ்வரூபம் எடுத்து வியாபித்துள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும்.
கடந்த ஆறு மாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் பெருத்த அமைதி காத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக 14 பேர் இதுவரை உயிர் நீத்தும் கூட அவர்களது மவுனம் கலையவில்லை.
சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்திற்கு எதிராக பிரசாரம் செய்த 50 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது என்றார் வைகோ.
அரசியல் நாடகம்-பாஜக:
டெல்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் பல்பீர் புஞ்ச் கூறுகையில், கருணாநிதியின் உண்ணாவிரதம் ஒரு தேர்தல் அரசியல் நாடகம். இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதை விட்டு காங்கிரசும் திமுகவும் இணைந்து நாடகம் போட்டுக் கொண்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications