சிறையில் கோபால கிருஷ்ணன் - டிரவுசரை வாங்கியதும் கதறினார்!
சென்னை: 14 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இந்தியன் வங்கித் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு, சரவண பவன் ராஜகோபால் உள்ள அறைக்கு எதிர் அறை தரப்பட்டுள்ளது. சிறையில் கைதிகளுக்கான டிரவுசர், சட்டை அவரிடம் தரப்பட்டபோது கதறி அழுதாராம்.
1993-ம் ஆண்டு கோபாலகிருஷ்ணன் இந்தியன் வங்கித் தலைவராக இருந்தபோது, மும்பையைச் சேர்ந்த பிஜே என்ற பைப் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ. 8.86 கோடியை மும்பை கிளை மூலம் வழங்கப்பட்டது.
ஆனால் இவ்வளவு பெரிய தொகை வழங்கப்படுவதற்கு வங்கி கேட்ட குறைந்தபட்ச ஆவணங்களைக் கூட, பிஜே நிறுவனம் இந்தியன் வங்கியில் சமர்ப்பிக்கவில்லை.
பல வழக்குகளில் கோபால கிருஷ்ணன் சிக்கிக் கொண்ட போது, இந்த கடன் வழங்கலின் பின்னணியிலிருந்து மோசடி குறித்தும் சிபிஐ விசாரித்தது. சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது. நேற்று அந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ரெங்கராஜன் வழங்கினார்.
போதிய ஆவணங்கள் இன்றி முறையற்று இந்தக் கடன் வழங்கப்பட கோபாலகிருஷ்ணன் முதன்மைக் காரணமாக இருந்துள்ளதால் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.70 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தக் கடனை வழங்கிய அப்போதைய மும்பை கிளையின் மேலாளர் சண்முகராஜனுக்கும் 14 ஆண்டு தண்டனையும், ரூ. 80 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து நேற்று மாலை 3 மணிக்கு கோபாலகிருஷ்ணன் புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
தண்டனை பெற்ற கைதிகளுக்கு சிறையில் நம்பரும், அரைக்கால் டிரவுசர் மற்றம் சட்டையும் தருவார்கள். அதன்படி கோபாலகிருஷ்ணனுக்கும் டிரவுசர், சட்டை தரப்பட்டது.
அதை வாங்கிய கோபாலகிருஷ்ணன் கண்ணீர் விட்டுக் கதறி அழுதாராம்.
பின்னர் சிறைக் காவலர்கள், கோபாலகிருஷ்ணனை அவரது அறைக்குக் கொண்டு சென்று அடைக்கப்பட்டனர். தனி செல்லில் கோபாலகிருஷ்ணன் அடைக்கப்பட்டுள்ளார்.
இரவு அவருக்கு சப்பாத்தி தரப்பட்டதாம். தரையில் படுத்துத் தூங்கினார் கோபாலகிருஷ்ணன்.
கோபாலகிருஷ்ணன் இருக்கும் அறைக்கு நேர் எதிரில் உள்ள அறையில்தான் சரவண பவன் ராஜகோபால் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications