3வது கட்ட தேர்தல்-107 தொகுதிகளில் பிரசாரம் ஓய்வு

இந்தத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 30ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
சோனியா காந்திக்காக மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோர் தீவிரப் பிரசாரம் செய்துள்ளனர். பிரியங்கா காந்தி ரேபரேலியிலும், ராகுல் போட்டியிட்ட அமேதியிலும் மாறி மாறி முகாமிட்டுப் பிரசாரம் செய்துள்ளார்.
அத்வானிக்காக அவரது மகள் பிரதீபா காந்தி நகரில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டார்.
1991ம் ஆண்டு முதலே இங்குதான் தொடர்ந்து அத்வானி போட்டியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
107 தொகுதிகளிலும் மொத்தம் 1567 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். 9 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 30ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
3வது கட்ட தேர்தலில் நிற்கும் பிற முக்கிய வேட்பாளர்கள்..
எச்.டி. தேவெகெளடா, ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், முன்னாள் கர்நாடக முதல்வர் பங்காரப்பா, மத்திய அமைச்சர்கள் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், ஜோதிர் ஆதித்யா சிந்தியா.
குஜராத்தில் மொத்தம் உள்ள 26 லோக்சபா தொகுதிகளுக்கும் 3வது கட்டத்தில் தேர்தல் நடைபெறுகிறது.
இதுதவிர ம.பி. (16), உ.பி. (15), மேற்கு வங்கம் (14), பீகார், கர்நாடகா (தலா 11), மகாராஷ்டிரா (10), ஜம்மு காஷ்மீர், சிக்கிம், தத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகியவற்றில் தலா ஒரு தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications