விஜயகாந்த் விவசாயிகள் பக்கம்-பிரேமலதா பிரசாரம்
தூத்துக்குடி: விவசாயிகளை தமிழகத்தை ஆண்ட கட்சிகள் மறந்துவி்ட்டனர். ஆனால், விஜயகாந்த் விவசாயிகளுக்கு உதவக் கூடியவர். அவர் எப்போதும் விவசாயிகள் பக்கம் என அக்கட்சியின் மகளிர் அணி தலைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவியும், தேமுதிக மகளிர் அணி தலைவியுமான பிரேமலதா ஆகியோர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பிரேமலதா, தூத்துக்குடி வேட்பாளர் சுந்தரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது மேள தாளம் முழுங்க வாணவேடிக்கையுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரசாரத்தின் போது பிரேமலதா கூறுகையில்,
தமிழகத்தில் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் விஜயகாந்த் தெய்வத்தோடும், மக்களோடும் கூட்டணி வைத்துள்ளார். ஆனால் மற்ற கட்சிகள் பதவிக்காக கூட்டணி வைத்துள்ளனர்.
விஜயகாந்த் அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். இலங்கையில் அமைதி திரும்பிய பின்னர் தேர்தலை எதிர்கொள்ளலாம் என கூறினார். ஆனால் அப்போது வேறு யாரும் வாய் திறக்கவில்லை.
தற்போது உண்ணாவிரதம் என்று நாடகமாடுகிறார்கள். தனிஈழம் வேண்டும் என்று அறிக்கை வைக்கிறார்கள்.
நாங்கள் யாரையும் குறை கூறி ஓட்டு கேட்க வேண்டிய அவசியம் தேமுதிகவுக்கு இல்லை. தமிழகம் விவசாய பூமி என்பதை இதுவரை ஆட்சி செய்தவர்கள் மறந்துவிட்டனர். அவர்களுக்கு தண்ணீர், மின்சாரம் என எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை யாரும் தீர்த்து வைக்கவில்லை.
விஜயகாந்த் எப்போதும் விவசாயிகள் பக்கம்தான். அவர் முதல்வராக பதவியேற்றால் முதலில் கிராமங்களின் பக்கம் தான் கவனம் செலுத்துவார். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மக்களோடு கூட்டணி வைத்துள்ள விஜயகாந்த் கரத்தை பலப்படுத்த சுந்தருக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் பிரேமலதா.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம்












Click it and Unblock the Notifications