வைகோவின் மாஜி நண்பருக்கு 'சத்து' சோதனை!
கரூர்: கரூர் மாவட்ட முன்னாள் மதிமுக பிரமுகரும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நெருங்கிய நண்பருமாக இருந்த மொஞ்சனூர் ராமசாமி பெரும் விசனத்தில் இருக்கிறாராம்.
எல்லாம் 'சத்து' சரியாக கிடைக்காத சோகம்தான்.
கரூர் மதிமுக மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்தவர் மொஞ்சனூர் ராமசாமி. இவருக்கு கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இந்த நிலையில் மொஞ்சனூர் ராமசாமி திடீரென மதிமுகவில் இருந்து விலகி திமுகவிற்கு சென்றார்.
திமுகவில் சேர்ந்தால் '25 சத்து மாத்திரைகள்' (அப்படீன்னா என்னன்னு தெரியும்ல..அதான், அதேதான்!!!) தருவதாக பேச்சாம். அதை நம்பி படு உற்சாகமாக திமுகவில் சேர்ந்து விட்டார் மொஞ்சனூரார்.
ஆனால் சொன்னபடி அவருக்கு 25 வழங்ப்படவில்லையாம். மாறாக வெறும் '5 'மட்டுமே வழங்கிவிட்டு உரியவர்கள் அமைதியாகி விட்டார்களாம்.
என்னங்க இது, இப்படி பன்னிப்புட்டீங்க என்று உரியவர்களை அணுகி புலம்பியுள்ளார் மொஞ்சனூரார். ஆனால் அவர்களை கப்சிப் ஆகி விட்டார்களாம்.
ஏன் இப்படி நடந்தது, பேக்ரவுண்டில் பிளே செய்த பார்ட்டி யார் என்பது குறித்து மொஞ்சனூரரர் குரூப் இப்போது ஆய்ந்து வருகிறதாம்.
நிவாரணம் கிடைக்காவிட்டால் முதல்வர் வரை போகவும் மொஞ்சனூரார் குரூப் தயாராகி விட்டதாம்.
அரசல்புரசலாக இந்ச சம்பவம் வெளியே கசிய கரூர் மாவட்டமே சிரிப்போ சிரிப்பென்று சிரித்துக் கொண்டுள்ளது.