தேர்தலுக்கு பின் தனி ஈழமே முதல் வேலை-ராமதாஸ்
நெல்லை: நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின் தனி ஈழம் அமைப்பதே தங்கள் கூட்டணியின் முதல் வேலை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுகூட்டத்தில் அதிமுக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்,
ஈழத்தமிழர் பிரச்சனையில கருணாநிதியும், சிதம்பரமும் பேசி வைத்துக் கொண்டு நாடகம் நடத்தியுள்ளனர். இலங்கை பிரச்சனையில் கருணாநிதி மனித சங்கிலி உள்பட அவராக எதுவும் செய்யவில்லை. எல்லாம் நான் சொல்லி செய்ததுதான்.
இலங்கையில் போரை நிறுத்த போனை எடுத்து கருணாநிதி சோனியாவிடம் பேசினாலே போதும். போரை நிறுத்தவிட்டால் கூட்டணியை விட்டு சென்று விடுவேன் என்று கூறியிருக்கலாமே, இப்போதும் சொல்லலாமே, இப்போது போர் நின்று விட்டது என்று சொல்கிறார்கள்.
இவர் சொன்ன அன்று இரவே இலங்கையில் குண்டு மழை பொழிந்து 272 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈழம் அங்குள்ள மக்களுக்கு அன்னை பூமி, அங்குதான் தமிழ் ஈழம் அமைப்போம் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
இந்த கூட்டணியில் வைகோ, தா.பாண்டியன் போன்றோரும் இருக்கிறார்கள். ஒத்த கருத்துள்ள நாங்கள் இணைந்திருக்கிறோம். மத்தியில் புதிய அரசு அமைந்ததும் நாங்கள் முதல் வேலையாக இதை செய்வோம்.
தலித் கிறிஸ்தவர்களுக்கு தலிக்களுக்கான உரி்மை கிடைக்க பாடுபடுவோம். அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது நிச்சயமாகிவிட்டது. எனவே வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை அதிகப்படுத்த வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும். இங்கு கூடியிருக்கிற பெண்கள் ஒவ்வொருவரும் 100 பெண்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். உங்கள் பகுதியில் 90 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்காக வீதிவிதியாக சென்று தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என்றார் ராமதாஸ்.
-
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ











Click it and Unblock the Notifications