மதுரையில் வாக்காளர்களுக்கு பணம்-வாசன் மறுப்பு
மதுரை: மதுரையில் திமுக கூட்டணியினர் தேர்தலில் வெற்றிபெற வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக எழுந்துள்ள புகாரை மத்திய புள்ளியல் துறை அமைச்சர் ஜிகே வாசன் மறுத்துள்ளார்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு வரும் 13ம் தேதி நடக்கிறது. மதுரை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் அக்கட்சியின் தென்மண்டல அமைப்பு செயலர் அழகிரி போட்டியிடுகிறார். தற்போது அவர் மதுரை பகுதிகளில் சுறுசுறுப்பாக பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் வாக்காளர்களுக்கு ஓட்டு போட பணம் கொடுப்பதாக அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை வந்துள்ள மத்திய புள்ளியல்துறை அமைச்சர் ஜிகே வாசன் நிருபர்களிடம் கூறுகையில்,
அழகிரி கடினமான உழைப்புக்கு சொந்தக்காரர். அவர் தொண்டர்களின் நாடி நரம்பை உணர்ந்தவர். மக்களின் நிலையை நன்கு புரிந்தவர். அவரது வெற்றி மதுரை தொகுதி வளர்ச்சிக்கும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் வழி வகை செய்யும்.
மத்திய அரசின் அனைத்து திட்டங்களும், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகம் செயல்படுத்தப்படுகின்றது.
எனவே, இத்தேர்தலில் 100 சதவீதம் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறுவது சுத்த பொய் என்றார்.












Click it and Unblock the Notifications