விபச்சாரம்: சென்னையில் மும்பை பெண்கள் மீட்பு
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட புரோக்கர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு மும்பை அழகிகளை மீட்டனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சாய்நகரில் விபச்சாரம் நடப்பதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் ராதாகிருஷ்ணனுக்கு தொடருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரகசிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த பங்களா ஒன்றுக்குள் அடிக்கடி ஆண்கள் சென்று வருவதை போலீசார் தெரிந்து கொண்டனர். மேலும், அங்கிருந்து பெண்கள் அடிக்கடி கார்களில் வெளியே அழைத்து செல்லப்படுவதையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த பங்களாவுக்குள் அதிரடியாக நுழைந்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது அங்கு மும்பையில் இருந்து அழைத்து வரப்பட்ட சில அழகிகளை வைத்து அங்கு விபச்சாரம் செய்யப்படுவது உறுதியானது. அங்கு ஏசி அறையில் உல்லாசம் அனுபவிக்க அனைத்து சொகுசு வசதிகளும் இருந்துள்ளன.
இதையடுத்து போலீசார் பெண்கள் சோனியா காயத்திரி பிரசாத் (21), சாந்தினி பீவி (29) ஆகிய இரண்டு பேரையும் மீட்டு, பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அங்கிருந்த விபச்சார புரோக்கர்கள் ஸ்டீபன் அலெக்ஸ் மற்றும் பாபு ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கார்கள், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இதில் சென்னையை சேர்ந்த பல பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், அழகிகளை அவர்களின் வீட்டுக்கே காரில் அழைத்து சென்று ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வசூல் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த வாகனங்களை ஓட்டிச் சென்ற திருச்சியை சேர்ந்த மணிமாறன் என்பவரையும், திருவனந்தபுரத்தை சேர்ந்த சுனில் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications