தமிழகத்தில் பிரசாரம் செய்ய வரும் மன்மோகன் சிங்
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரசாரம் செய்ய வருவதாக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் தெரிவித்துள்ளார்.
தீவுத் திடலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட சுதர்சனம் அங்கு செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரசாரம் செய்ய வருகிறார். எந்த ஊரில், எப்போது பிரசாரம் செய்வார் என்பது பின்னர் விரிவாகத் தெரிவிக்கப்படும் என்றார்.
ஆனால் ராகுல் காந்தி பிரசாரம் செய்வாரா, இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றார் சுதர்சனம்.
தமிழக லோக்சபாத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் உள்ளூர் தலைவர்களே தற்போது பிரசாரம் செய்து வருகின்றனர். அகில இந்திய அளவில் பெரிய தலைவர்கள் யாரும் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சோனியாவும், பிரதமரும் மட்டுமே பிரசாரம் செய்வார்கள் என்று தெரிகிறது. அதேசமயம், ராகுல் காந்தி வரும் வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் காங்கிரஸ் மீது பெரும் அதிருப்தி நிலவுவதால் சோனியா, மன்மோகன் சிங்குடன் நிறுத்திக் கொள்ள காங்கிரஸ் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.