ஜல்லிக்கட்டை முறைப்படுத்த புது சட்டம்-தமிழக அரசு
டெல்லி: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முறைப்படுத்திய புதிய சட்டம் ஒன்றை உருவாக்கி வருவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு நேற்று பதில் மனுவைத் தாக்கல் செய்தது.
அதில், ஜல்லிக்கட்டுப் போட்டியை முறைப்படுத்த தமிழக அரசு புதிய சட்டம் ஒன்றை உருவாக்கி வருகிறது. அதில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், உயிரிழப்பு போன்றவற்றை தவிர்க்கத் தேவையான அம்சங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.
தற்போது பொதுத் தேர்தல் காலம் என்பதால் இந்த சட்டத்தை இப்போது கொண்டு வர முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இந்த வழக்கு கடந்த ஜனவரி 30ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications