மாணவியிடம் அத்துமீறல்-ஆசிரியர் கைது
சென்னை: திருவள்ளூர் அருகை பள்ளி மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஆசிரியரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். வரும் 20ம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கசுவா கிராமத்தில் மகாகவி பாரதியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு பழனிச்சாமி (30) என்பவர் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2007ல் அந்த பள்ளியில் படித்த 9ம் வகுப்பு மாணவி சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை பள்ளிகூடத்தில் தனிமைப்படுத்தி அத்துமீறி நடக்க முயற்சித்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் காசி மற்றும் காஞ்சனா போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால், போலீசார் புகாரை கண்டு கொள்ளவில்லை என்றும், அவர்கள் அதை அப்படியே விட்டுவிட்டனர் எனவும், பள்ளி நிர்வாகமும் அந்த ஆசிரியருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டப்டடது.
இதையடுத்து பொது மக்கள் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
சுறுசுறுப்பாக செயல்பட்ட சிபிசிஐடி போலீசார் பழனிச்சாமியின் மேல் சுமத்தப்பட்ட குற்றத்தை உறுதி செய்தனர். இதை தொடர்ந்து மாணவி சித்ராவும் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து நேற்று சிபிசிஐடி போலீசார் பழனிச்சாமியை கைது செய்தனர்.
அவர் உடனடியாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை நீதிபதிகள் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்குமாறு சிபிசிஐடி போலீசார், கல்வி துறைக்கு சிபாரிசு செய்துள்ளனர்.
கைதான ஆசிரியர் பழனிச்சாமிக்கு சமீபத்தில் தான் திருமணம் நிச்சயமானது. அவருக்கு வரும் 20ம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் அவர் கைது செயய்ப்பட்டுள்ளது, அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications