For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சைதை பாலத்திலிருந்து சோனியாவுக்கு கருப்பு கொடி!

By Staff
Google Oneindia Tamil News

Nedumaran
சென்னை: சென்னைக்கு இன்று மாலை வர இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்திலிருந்து கருப்புக் கொடி காட்டப்படும் என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியிருந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து வாய் திறக்காத காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தேர்தல் பிரசாரத்திற்காக மட்டும் தமிழகம் வர உள்ளார்.

இதை கண்டிக்கும் வகையில் அவருக்கு எதிரான கறுப்புகொடி ஆர்ப்பாட்டம் 6ம் தேதி (இன்று) மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் அருகில் நடைபெறும். தமிழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை தெரிவிக்க வர வேண்டுகிறேன் என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால், சோனியா தனது பிரச்சாரப் பயணத்தை ரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்து மக்கள் கட்சியும்..

அதே போல சோனியா காந்திக்கு கறுப்பு கொடி காட்டப்படும் என இந்து மக்கள் கட்சியும் அறிவித்திருந்தது.

அதன் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் திருச்சியில் நிருபர்களிடம் கூறுகையில்,

ராஜீவ் காந்தி கொலையோடு தொடர்புடையவர்களை அழிப்பதாக எண்ணிக் கொண்டு இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்களை பலி வாங்கும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு சோனியா உறுதுணையாக உள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த தவறிய சோனியா தமிழகத்தில் வந்து தேர்தல் பிரச்சாரம் செய்வதை தமிழக மக்கள் விரும்பவில்லை.

எனவே சோனியாவுக்கு சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் கறுப்பு கொடி காட்டுவோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X