காங்கிரசுடன் கூட்டணியா?-ஜெயலலிதா பதில்
சென்னை: தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கூட்டணியில் சேர மாட்டேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறாதது திமுகவுக்கு உதறலைத் தந்துல்ளது.
தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நேற்று சென்னை திரும்பிய ஜெயலலிதாவிடம் இடதுசாரிகள், நிதிஷ்குமார், நாயுடு, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிக்குத் தயார் என்றரீதியில் ராகுல் காந்தி பேசியுள்ளது குறித்து கருத்து கேட்டபோது பதிலளித்த ஜெயலலிதா,
ராகுல் காந்தி பேட்டி தொடர்பான செய்தியை நான் இன்னும் பார்க்கவில்லை. தற்போது எனது முழு கவனமும் தேர்தல் பிரசாரத்திலும், தமிழ்நாட்டில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதிலும்தான் உள்ளது. தற்போதைய நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை என்றார்.
அதே நேரத்தில் காங்கிரசுடன் கைகோர்க்கத் தயார் இல்லை என்று ஜெயலலிதா கூறவில்லை. எதுவும் நடக்கலாம் என்றரீதியில் அவர் பதில் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலம் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா,
இலங்கை தமிழர்கள் அவதி குறித்து தமிழக மக்கள் ஆழ்ந்த அனுதாபமும், கவலையும் கொண்டுள்ளனர். இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவது குறித்து, இந்திய அரசு தேவையான நடவடிக்கையை முன்பே எடுத்து போர் நிறுத்தப்பட்டு இருந்தால் ஏராளமான தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
இலங்கை தமிழர்களுக்காக இந்திய அரசு உருப்படியாக எதையும் செய்யவில்லை என்றும் மக்கள் கருதுகிறார்கள். அத்துடன் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசுக்கு, நிர்ப்பந்தம் கொடுக்க முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார் என்றும் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
தேர்தல் பிரசாரத்தின்போது கிடைத்துள்ள அனுபவத்தை வைத்து சொல்கிறேன், மத்திய-மாநில அரசுகள் மீது மக்கள் மிகவும் கோபமாக இருப்பது எனக்குத் தெரிய வந்தது என்றார்.












Click it and Unblock the Notifications