மின் கோபுரத்தில் இடி-இருளில் மூழ்கிய தென்காசி
தென்காசி: தென்காசி பகுதியில் உள்ள மின்கோபுரத்தில் இடி விழுந்ததை அடுத்து நேற்று அங்கு சுமார் 8 மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது. இதையடுத்து தென்காசி இருளில் மூழ்கியது.
தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளி்ல் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென வானத்தி்ல் கருமேக கூட்டங்கள் உருவாகின. இதை தொடர்ந்து பலத்த இடி மற்றும் மின்னலுடன் சுமார் 2 மணி நேரம் மழை கொட்டியது.
அப்போது தென்காசி நகருக்கு மின்சாரம் விநியோகம் செய்யும் கொடிகுறி்ச்சி உயர் அழுத்த மின் பகிர்மான சேமிப்பு கிடங்கிலிருந்த உயர் அழுத்த மின்கோபுரத்தில் இடிதாக்கியது. இதையடுத்து உயர் அழுத்த மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் நேற்று மாலை 5 மணி முதல் முதல் நள்ளிரவு 1 மணி வரை தென்காசி வட்டாரத்தில் 8 மணி நேரம் மின்வினியோகம் தடைப்பட்டது. நகர் முழுவதும் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
பின்னர் தடைப்பட்ட அந்த மின் கோபுரத்தை கயத்தாறு மின் வினியோக பிரிவை சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் உட்பட 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடும் போராட்டத்துக்கு பின் சரி செய்தனர். இதையடுத்து இரவு 1 மணிக்கு மின்வினியோகம் தொடர்ந்தது.