பங்குச் சந்தையில் 216 புள்ளிகள் சரிவு
Subscribe to Oneindia Tamil
மும்பை: நாட்டின் பணவீக்கத்தில் ஏற்பட்ட உயர்வைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை இன்று 240 புள்ளிகளை இழந்தது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 57 புள்ளிகள் சரிந்தது.
இன்று காலை வர்த்தகம் துவங்கியபோது, பங்குச் சந்தையில் சாதக நிலை இருந்தது. ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு மளமளவென வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டது.
நாட்டின் பணவீக்கத்தில் ஏற்பட்ட திடீர் உயர்வு காரணமாக, பங்கு பரிமாற்றத்தில் வீழ்ச்சி ஏற்படத் துவங்கியது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 63 புள்ளிகள் சரிந்தது. குறிப்பாக வங்கித் துறைப் பங்குகளில் பெரும் சரிவு ஏற்பட்டது.
விப்ரோ, ரிலையன்ஸ் இன்ப்ரா, ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பெருமளவு விலை சரிந்து நஷ்டத்தை ஏற்படுத்தின.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 11876.43 புள்ளிகளாகவும், நிப்டி 3620.70 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.












Click it and Unblock the Notifications