எந்த ஆயுதத்தையும் பயன்படுத்த தடையில்லை-கோதபய

மிகக் குறுகிய பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க, கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் அப்பாவி மக்கள் இருப்பதாக கூறப்படும் பகுதியில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த இலங்கை திட்டமிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் கோதபய இப்படிக் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
கோதபய கூறுகையில்,
போர் நடைபெறும் பகுதியில் உள்ள மக்களை குறைந்தபட்ச இழப்புக்களுடன் மீட்பதுதான் அரசின் நோக்கமாகும். நாடு, அரசு என்ற வகையில் எங்களுக்கு அந்தப் பொறுப்பு உள்ளது. பொதுமக்களைக் கொன்று இதனைச் செய்ய முடியாது.
இந்த விஷயத்தில் வெளிநாடுகளின் தலையீடுகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. இப்படிப்பட்ட தலையீடுகளை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே விடுதலைப் புலிகளும் தங்களுடைய இணையத் தளங்களில் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
போர் முனையில் விடுதலைப் புலிகளை வெற்றி கொள்வதற்கான அனைத்தையும் நாம் செய்யும் அதே வேளையில் இந்தத் அந்நியத் தலையீடுகளைத் தவிர்த்துக் கொள்வதற்கும் வழிவகைகளைப் பார்க்க வேண்டியுள்ளது.
இதன் காரணமாகவே கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற அறிவிப்பை அதிபர் ராஜபக்சே வெளியிட்டார். இருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் மண் அணைகள் மற்றும் பதுங்குகுழிகளைத் தகர்ப்பதற்கு படையினருக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.
அதிபர் மற்றும் முப்படையினர் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் சர்வதேச சமுதாயம் என பலர் உரத்துக் குரல் கொடுத்தாலும் ஒரே நம்பிக்கையுடன் செயற்பட்டதால்தான் எங்களால் இந்த அளவுக்கு வர முடிந்தது என்று கூறியுள்ளார் கோதபய.












Click it and Unblock the Notifications