For Daily Alerts
Just In
விருதுநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 'ரெய்டு' - ரூ. 17 ஆயிரம் பறிமுதல்
விருதுநகர்: விருதுநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் ரூ.17 ஆயிரத்து 560 கைப்பற்றப்பட்டது.
விருதுநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய வருபவர்களிடம் அதிகாரிகளும், ஊழியர்களும் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வதாக, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து அவர்கள் விருதுநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அதில் அந்த அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் சரஸ்வதி என்பவரிடமிருந்து சுமார் ரூ. 17 ஆயிரத்து 560 போலீசார் கைபற்றினர்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Sunday, May 10, 2009, 15:52 [IST]