பண்பில்லாமல் பேசுவோருக்கு அழிவு ஆரம்பம்-அழகிரி

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக முதல்வர் கருணாநிதியை எந்த அளவுக்கு பண்பில்லாமல் பேச முடியுமோ அந்த அளவுக்கு சிலர் பேசுகின்றனர். இது அவர்களது அழிவு காலத்தின் முதல்படி என்று திமுக தென் மண்டல அமைபுபச் செயலாளர் அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நெல்பேட்டை, கீழவெளி வீதி, முனிச்சாலை, இஸ்மாயில்புரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் அழகிரி தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

மாநிலத்தில் திமுக அரசு, மத்தியில் காங்கிரஸ் அரசுகளின் சாதனைகள் மக்களை போய் சேர்ந்துள்ளன. எதிர்க்கட்சிகளோ எங்களை விமர்சித்து பிரசாரம் செய்கின்றன.

குறிப்பாக முதல்வர் கருணாநிதியை எந்த அளவுக்கு பண்பில்லாமல் பேச முடியுமோ அந்த அளவு பேசுகின்றனர். இது நீண்ட நாள் நீடிக்காது. இது அவர்களது அழிவு காலத்தின் முதல் படி. திமுக மற்றும் அதன் கூட்டணி்க்கு தென் மாவட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

அழகர் ஆற்றில் இறங்கும்போது என்னால் வன்முறை ஏற்படும் என்று ஜெயலலிதா பேசினார். ஆனால் திருவிழா அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இது போன்ற பொய் புகார்களை அவர்கள் கூறுவது குறித்து, தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்படும். நான் ஏற்கனவே கூறியபடி சுமார் 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+