15ம் தேதியே பிளஸ் 2 தேர்வு முடிவுகள்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 15ம் தேதி வெளியாகலாம் என்று தெரிகிறது.
நாளை முதல் கல்வித்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். ஓட்டுப்பதிவு முடிந்து 13ம் தேதி மாலை இயந்திரங்களை ஒப்படைக்கும் வரை இவர்கள் அந்தப் பணியில் இருப்பர்.
இதையடுத்து ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் 16ம் தேதிக்கு முன்பாக 15ம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவு வெளியாக வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின் 18ம் தேதி வாக்கில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications