துன்பத்தை இலவசமாக கொடுத்த திமுக-ஜெயராமன்
பொள்ளாச்சி: திமுகவினருக்கு இலவச பொருட்களை வழங்கிய திமுக அரசு, மக்கள் கேட்காமலே அவர்களுக்கு துன்பத்தை இலவசமாக கொடுத்துள்ளது என அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்துப் அக்கட்சியின் எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
திமுக அரசு மக்களுக்கு இலவச கலர் டிவி, கேஸ் அடுப்பு ஆகியவற்றைத் தருவதாக அறிவித்தது. அது இன்று வரை பலருக்கும் கிடைத்தபாடு இல்லை. அந்த பலனை அனுபவித்தவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் தான்.
தற்போது விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி சிலருக்குப் பொருள்களை இலவசமாக வழங்கிய திமுக அரசு, பொதுமக்கள் யாரும் கேட்காமலேயே அவர்கள் அனைவருக்கும் துன்பத்தையும் இலவசமாக வழங்கிவிட்டது.
மதுரை கோட்டத்தில் இருந்த பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு ரயில்வே பகுதிகளைத் தமிழக அரசு யாரிடமும் தெரிவிக்காமல் பாலக்காடு கோட்டத்துக்குத் தாரை வார்த்துவிட்டது. இது மக்களுக்கு செய்த மாபெரும் துரோகம்.
பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளை மீண்டும் சேலம் அல்லது மதுரை கோட்டத்துக்குக் கொண்டு வர அதிமுக முயற்சி செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications