6 கோடி ரூபாய் ரூ. 100 நோட்டுக்களாக மாற்றம் - விசாரணை கோரும் சிபிஎம்

Subscribe to Oneindia Tamil

Varadarajan
சென்னை: விருதுநகர் வங்கியில் ரூ. 6 கோடி பணத்தை கொடுத்து 100 ரூபாய் நோட்டுக்களாக மாற்றியுள்ளனர். இதை மாற்றியவர் யார், எதற்காக மாற்றினார்கள் என்பது குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

விருதுநகரிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை மூலம் ரூ.6 கோடிக்கான 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை 100 ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மே 5, 7, 9 தேதிகளில் இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

மாநில அமைச்சர் ஒருவரது மேலாளரும், அவரை சார்ந்தவர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கியின் வழக்கமான பணி நேரத்தை மீறியும் இந்த நோட்டுகள் எண்ணி ஒப்படைக்கும் பணி நடந்துள்ளது. தேர்தல் காலத்தில் தேர்தல் மோசடிகளுக்காகவே நடைபெற்றுள்ள இந்த செயல்களுக்கு பொதுத்துறை வங்கியை பயன்படுத்தியுள்ளனர்.

முற்றிலும் முறைகேடாக நடந்துள்ள இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி உண்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். வங்கியிலுள்ள ரகசிய கேமிரா மூலமும், வங்கியின் பாதுகாப்பு அறையின் இருப்பு பற்றிய ஆவணங்களை சோதித்தும் இதுபற்றிய விவரங்களை அறிய இயலும்.

யாருடைய பணம், யார் மூலமாக, யாருக்காக எதற்காக இவ்வாறு மாற்றப்பட்டது என்ற விவரங்கள் வெளிக் கொணரப்பட வேண்டும். இதுபற்றிய விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது.

மாநிலத்தின் பல பகுதிகளில் தேர்தல் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டு, பண விநியோகம் நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் நிகழ்வு பற்றி காலதாமதமின்றி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+