தேர்தல்-ராமதாஸ் மருமகள் கோவிலில் சிறப்பு பூஜை
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: நாடாளுமன்ற தேர்தலில் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என அக்கட்சி நிறுவனர் ராம்தாஸின் மருமகள் செளமியா அன்புமணி சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மருமகளும், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசின் மனைவியுமான செளமியா அன்புமணி நேற்று அக்கட்சி நிர்வாகிகள் சிலரோடு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார்.
அங்கு மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் ஏழு பேரும் வெற்றி பெற வேண்டும் என்று சிறப்பு பூஜை நடத்தினார். அதன்படி, வேட்பாளர்கள் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
அன்புமணி செளமியா சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.












Click it and Unblock the Notifications