தொகுதி நீக்கத்தால் அதிருப்தி-'49 O' வை பயன்படுத்திய புதுக்கோட்டை வாக்காளர்கள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி நீக்கப்பட்டதைக் கண்டித்து அத்தொகுதி வாக்காளர்கள் பலரும், வாக்களிக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கும் '49 O' படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.
வாக்குப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே 10 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் படிவத்தைக் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை தொகுதி இந்த முறை நீக்கப்பட்டு விட்டது. அதில் இடம் பெற்றிருந்த தொகுதிகளை ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை தொகுதியில் சேர்த்து விட்டனர்.
இதை எதிர்த்து புதுக்கோட்டையில் பலவிதமான போராட்டங்கள் நடத்தப்பட்டது. இருப்பினும் பலன் இல்லை. இதையடுத்து வாக்களிக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கும் '49 O' படிவத்தை இன்று காலை முதல் வாக்காளர்கள் கொடுத்து வருகின்றனர். இதனால் தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஓட்டுப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே 10 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இப்படிவத்தைக் கொடுத்ததால் தேர்தல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் புறக்கணிப்பு..
இதேபோல கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தவளைப்பட்டி என்ற கிராமத்தில் அடிப்பட வசதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து அங்குள்ள 633 வாக்காளர்களும் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.