வறுமையை வென்ற நெல்லை மாணவி
நெல்லை: கீழ் நடுத்தரக் குடும்பத்துப் பின்னணி, தந்தையின் திடீர் மறைவு, கிராமத்து வசதியில்லாத பள்ளி என பல குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி, சிறப்பாக படித்து சாதனை படைத்துள்ளார் நெல்லை மாணவி ஜெசிமா சுலைஹா.
பிளஸ்டூ தேர்வில் மாநில அளவில் 3வது ரேங்க்கைப் பெற்றுள்ளார் சுலைஹா.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அமலி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்தவர் சுலைஹா.
பிளஸ்டூவில் 1183 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். சாதனை இவருக்குப் புதிதல்ல, பத்தாவது வகுப்பில், 489 மதிப்பெண்களுடன் 2வது ரேங்க் பெற்றவர் சுலைஹா.
தனது சாதனை குறித்து சுலைஹா கூறுகையில், தந்தை சையது சம்சுதீன் அம்பாசமுத்திரம் பஞ்சாயத்து யூனியனில் மேலாளராக இருந்தார். எனக்குத் தங்கை உண்டு. இருவரும் நன்கு படிப்போம். நன்கு படிக்குமாறு எனது தந்தை ஆர்வம் கொடுப்பார்.
நான் 9வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது திடீரென எனது தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இதனால் குடும்பம் அதிர்ச்சியில் மூழ்கியது.
இருப்பினும் பத்தாம் வகுப்பு தேர்வை மனதில் கொண்டு சிறப்பாக படித்து 489 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்தேன்.
தொடர்ந்து எனது தந்தையின் நினைவு என்னுள் இருந்து கொண்டே இருந்தது. அவர் என்னுடன் இருப்பது போலவே உணர்வேன். இந்த உணர்வுடனேயே பிளஸ் 2 தேர்விலும் சிறப்பாக படித்தேன். இப்போது இந்த ரேங்க் கிடைத்துள்ளது.
வீட்டில் டிவி கிடையாது. பொழுது போக்கு அம்சங்களையும் நான் விரும்புவது இல்லை. படிப்பு மட்டுமே எனக்கு பிடிக்கும். சுய முன்னேற்ற நூல்களை அவ்வப்போது படிப்பேன்.
எனது தாயார் ரேஹானுக்கு 4 மாதங்களுக்கு முன்புதான் ஆசிரியை வேலை கிடைத்தது. இதற்காக அவர் சென்னை செல்ல நேரிட்டது. எனவே எனது பாட்டி பாத்திமா எனக்கு உறுதுணையாக இருந்தார்.
மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக தற்போது சென்னை வந்துள்ளேன். டாக்டராகி மக்களுக்கு பணியாற்றுவேன். நான் படித்த அமலிப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் என் தங்கை சப்னம் சாஜிதாவும் என்னைப்போல ரேங்க் பெறுவாள் என்றார் சுலைஹா.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications