சூழ்நிலைக்கேற்ப சி.இ.ஓக்களும், தொழில் நிறுவனங்களும் மாற வேண்டும் - இந்திரா நூயி
வாஷிங்டனில் உள்ள பொருளாதார கிளப்பில் நடந்த தலைமை செயலதிகாரிகளுக்கான கூட்டத்தில் இந்திரா பேசுகையில், பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்ரது என்று அரிஸ்டாட்டில் ஒருமுறை கூறினார்.
எனவே தற்போதைய பொருளாதார நெருக்கடியில், நாம் நம்மை பல்வேறு பரீட்சைகளுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். நம்மை எந்த வகையில் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும்.
தற்போதைய பொருளாதர நெருக்கடி நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. எனவே நமக்கு புத்தம் புதிய தலைமை செயலதிகாரிகள் தேவை. தலைமை செயலதிகாரிகள் மட்டுமன்றி தொழில் நிறுவனங்களின் உத்திகளிலும் கூட மாற்றம் தேவை.
உலக அளவிலான சிந்தனையை கடைப்பிடித்து உள்ளூர்த் தேவைக்கேற்ப நாம் செயல்பட வேண்டும்.
திறந்த மனதுடன் தலைமை செயலதிகாரிகள் இருக்க வேண்டியது அவசியம். நமது புத்திசாலித்தனத்தை தொழிலில் பெருமளவில் பயன்படுத்த வேண்டும்.
மாறி வரும் உலகுக்கேற்ப நம்மை மாற்றிக் கொண்டு செயல்பட வேண்டும்.
நீண்ட காலத் திட்டங்களை அமல்படுத்துவதும் அவசியம். ஒரு நிறுவனம் பெரிய அளவில் வளர வேண்டும் என்றால் தனியார் மற்றும் அரசுத் துறையின் ஒத்துழைப்புடன் இணைந்து இயங்க வேண்டியது அவசியம் என்றார் இந்திரா.