தமிழக மக்களுக்கு நன்றி-தயாநிதி மாறன்
சென்னை: தமிழக மக்கள் மிகத் தெளிவான தீர்ப்பைத் தந்துள்ளனர். திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றிகள் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னையில் வெற்றி முகத்தில் காணப்படுபவருமான தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உறுதியான முடிவைத் தெரிவித்த தமிழக மக்களுக்கு திமுக நன்றி கூறிக் கொள்கிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும். மன்மோகன் சிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்பார்.
மக்கள் மிகத் தெளிவான தீர்ப்பைத் தந்துள்ளனர். இந்த வெற்றிக்கு தமிழகத்தில் ஆட்சி புரியும் திமுக அரசுதான் காரணம் என்றார் அவர்.
பின்னர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பேசிய அவர், தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்பது எங்களுக்கு முன்பே தெரியும்.
மதிமுக சார்பில் போட்டியிட்டு ஈரோட்டில் முன்னணியில் உள்ள கணேசமூர்த்தி திமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என்றார்.












Click it and Unblock the Notifications