அடுத்த நிதியமைச்சர் மான்டேக் சிங் அலுவாலியா?
நாடாளுமன்ற தேர்தலில் வென்ற காங்கிரஸ் தற்போது புதிய அமைச்சரவையை நிர்ணயிக்கும் வேலையில் உற்சாகமாக இறங்கியுள்ளது. இதற்கான காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் டெல்லியில் நடந்தது.
கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், நிதித்துறை பொறுப்பை தற்போது திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக இருக்கும் மான்டேக் சிங் அலுவாலியாவுக்கு கொடுக்கலாம் என்று கூறியதாகத் தெரிகிறது.
இவருக்கு நிதியமைச்சர் பதவி அளிக்கப்பட்டால் இவரும பிரதமர் மன்மோகன் சிங்கை போல் மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழைவார்.
சிறந்த பொருளாதார நிபுணரான அலுவாலியா கடந்த 2006 ஜூனில் திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக்கப்பட்டார். தற்போது 65 வயதாகும் அவர் நிதித்துறை செயலாளர், வர்த்தகதுறை செயலாளர், நிதித்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகர் உள்ளிட்ட பணிகளில் இருந்துள்ளார்.
சில காலம் ஐ.எம்.எப்பிலும் பணிபுரிந்துள்ளார் அலுவாலியா. பிரதமர் மன்மோகன் சி்ங்கின் வலதுகரமாக கருதப்படுபவர் இவர்.
கமல்நாத்துக்கு வர்த்தகத்துறை..
அதே போல இப்போதைய வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத் தொடர்ந்து அதே பதவியில் இருப்பார் என்று தெரிகிறது. அதே நேரத்தில் இந்தப் பொறுப்புக்கு கபில் சிபலின் பெயரும் அடிபடுகிறது.