அமைச்சரவையில் சேர மம்தா பானர்ஜி மறுப்பு?
டெல்லி: திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மத்திய அமைச்சரவையில் இணைய மாட்டார் என்று தெரிகிறது.
மேற்கு வங்கத்திலேயே இருக்க விரும்புவதாகவும், அடுத்த சட்டசபைத் தேர்தலில் இடதுசாரிகளைத் தோற்கடிக்க காங்கிரஸ்-திரிணமூல் காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்த விரும்புவதாகவும் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
முன்னதாக அவர் ரயில்வே அமைச்சரவையைக் கோருவார் என்று கருதப்பட்டது.
அவமானப்படுத்தப்பட்ட லாலு:
இந் நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அழைப்பின் பேரில் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார் லாலு.
அப்போது தன்னை சில மூத்த காங்கிரஸ் தலைவர்களும், மாநில காங்கிரஸ் தலைவரும் அவமானப்படுத்துவதாக லாலு குற்றம் சாட்டினார்.
இதையடுத்து அவருக்கும் சில காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும் தெரிகிறது.
எந்த நிபந்தனையும் இல்லாமல் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பதாகக் கூறிக் கெண்டு தான் இன்று டெல்லிக்கு வந்தார் லாலு.
இந் நிலையில் லாலுவை அமைச்சரவையில் சேர்க்கக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவிடம் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் அவருக்கு இடம் தரப்படாது என்றே தெரிகிறது.
ஏற்கனவே லாலுவை சேர்க்க ராகுல் காந்தியும் எதிர்ப்புத் தெரிவித்துத குறி்ப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications