ராஜபக்சேவுடன் பிரணாப் அவசர ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் இந்தியாவுக்கு கிடைத்ததும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொலைபேசி மூலம் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
இன்று காலை முல்லைத்தீவில் உள்ள கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த சண்டையில் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி, அரசியல் பிரிவு தலைவர் நடேசன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்புலிகள் பிரிவு தலைவர் சூசை உள்ளிட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தகவல் இந்தியாவுக்குக் கிடைத்ததும் பிரணாப் முகர்ஜி, அதிபர் ராஜபக்சேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின்போது பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பிரணாப் விசாரித்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications