சகோதரரை மிரட்டியதாக தா.பாண்டியன் மீது வழக்கு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே இருக்கும் பண்ணை வீட்டிலிருந்து காலி செய்யுமாறு தன்னை சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் மிரட்டி வருவதாக அவரது சகோதரர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து தா.பாண்டியன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகில் வத்தலக்குண்டு போகும் வழியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் குடும்பத்தாருக்கு சொந்தமான பண்ணை வீடு இருக்கிறது.
டேவிட் பண்ணை எனப்படும் இந்த வீட்டில் தற்போது தா.பாண்டியனின் சகோதரர் செளந்தரராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந் நிலையில் சமீபத்தில் தா.பாண்டியனின் தூண்டுதலின் பேரில் சுமார் 12 பேர் கொண்ட கும்பல் செளந்தரராஜன் குடியிருந்து வரும் அந்த பண்ணை வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடு தா.பாண்டியனுக்கு சொந்தமானது அதனால் உடனே வீட்டை காலி பண்ணுங்கள் என கூறி மிரட்டியுள்ளனர். வீட்டில் இருந்த குடிநீர் குழாய் இணைப்பையும் அடித்து உடைத்துள்ளனர்.
பயந்து போன தா.பாண்டியனின் சகோதரர் உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், எனது சகோதரர் தா.பாண்டியனும், சகோதரிகள் ராஜாமணி ஜேம்ஸ், பாலின் ஜெயராஜ் ஆகியோரின் தூண்டுதல் காரணமாக சுமார் 12 பேர் வீட்டை காலி செய்யும்படி மிரட்டினார்கள். குடிநீர் குழாய் இணைப்பையும் உடைத்தனர் என கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் தா.பாண்டியன், ராஜாமணி ஜேம்ஸ், பாலின் ஜெயராஜ் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications