ஜெயலலிதாவிடம் ஆசி பெற்ற அதிமுக எம்.பி.க்கள்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுந்தக்கப்பட்ட 9 அதிமுக எம்.பி.க்களும் நேற்று மாலை அக்கட்சி பொது செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாமக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட அதிமுக 9 இடங்களில் மட்டுமே வென்றது.
இந்நிலையில் வெற்றி பெற்ற 9 வேட்பாளர்களும் நேற்று ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சென்று சந்தித்தனர்.
தம்பிதுரை (கரூர்), செம்மலை (சேலம்), வேணுகோபால் (திருவள்ளூர்), ஓ.எஸ்.மணியன் (மயிலாடுதுறை), சிட்லபாக்கம் ராஜேந்திரன் (தென் சென்னை), சிவசாமி (திருப்பூர்), ஆனந்தன் (விழுப்புரம்), சுகுமார் (பொள்ளாச்சி) மற்றும் குமார் (திருச்சி) ஆகியோர் அவரிடம் ஆசி பெற்றனர்.
அவர்களுடன் அதிமுக அரசியல் ஆலோசகர் சி.பொன்னையன், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications