எம்எல்ஏ பதவி-எம்பியான தம்பித்துரை ராஜினாமா
சென்னை: கரூர் தொகுதி அதிமுக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தம்பித்துரை, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
பர்கூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார் தம்பித்துரை. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த எம்பி தேர்தலில் தம்பித்துரை, கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து தனது எம்எல்ஏ பதவியை தம்பித்துரை ராஜினாமா செய்துள்ளார். சட்டசபைச் செயலாளர் செல்வராஜை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார் தம்பித்துரை.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கொடுக்க வந்தேன். அங்கு சபாநாயகர் இல்லை. எனவே அவரிடம் போனில் பேசினேன். சட்டசபை செயலாளரிடம் கொடுக்கும்படி கூறினார். எனவே கடிதத்தை செயலாளரிடம் சமர்ப்பித்து இருக்கிறேன்.
நான் ராஜினாமா செய்துள்ள பர்கூர் தொகுதியில் அதிமுக மீண்டும் போட்டியிடும். அது அம்மாவின் கோட்டை (இங்கு தான் சுகவனத்திடம் ஜெயலலிதா தோற்றார் என்பது நினைவுகூறத்தக்கது). அம்மாவின் ஆதரவினாலும், மக்கள் ஆதரவினாலும் அந்த தொகுதியில் மீண்டும் அதிமுக வெற்றி பெறும் என்றார் தம்பித்துரை.