தமிழர் மீது ராணுவ தாக்குதல் தொடர்கிறது-நெடுமாறன்
சென்னை: போர் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறி இலங்கை, உலக நாடுகளை ஏமாற்றி வருகிறது. ஆனால், தமிழர்கள் மீது தொடர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகிறது என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நெடுமாறன் கூறுகையில்,
இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் சுமார் 1 லட்சத்துக்கும் மேலான தமிழர்களும், போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கில் மக்கள் உறுப்புகளை இழந்து உயிருக்கு போராடி வருகிறார்கள். பாதுகாப்பு பகுதியில் இருப்பவர்கள் உணவும், மருந்தும், குடிநீரும் இல்லாமல் செத்து வருகின்றனர்.
போர் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறி இலங்கை, உலக நாடுகளை ஏமாற்றி வருகிறது. ஆனால், தமிழர்கள் மீது தொடர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கிருக்கும் அப்பாவி மக்களை காப்பாற்ற ஐநா விரைவாகவும், நேரடியாகவும் தலையிட வேண்டும்.
போரில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், உறுப்புகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். திட்டமிட்டு தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே, ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை பிடித்து போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்.
21ல் எழுச்சி பேரணி...
அவர்களை சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஐநா அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வற்புறுத்தும் வகையில் 21ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் எழுச்சி பேரணி நடத்தும் என்றார் நெடுமாறன்.
வணிகர் சங்கம் பங்கேற்பு...
நெடுமாறன் அறிவித்துள்ள இந்த பேரணியில் தாங்களும் கலந்து கொள்ள போவதாக தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். மேலும் வணிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த பேரணியில் பங்கேற்க 21ம் தேதி மாலை 3 மணிக்கு மன்றோசிலைக்கு அருகில் வரவேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications