இலங்கை தமிழ் எம்.பி. பத்மநாதன் மதுரையில் மரணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பி. பத்மநாதன் கனகசபை மதுரையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
இலங்கையைச் சேர்ந்த எம்.பி. பத்மநாதனுக்கு மதுரையில் உள்ள திருநகரில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. தமிழகம் வந்தால் இந்த வீட்டில்தான் தங்குவது வழக்கம்.
மதுரையில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் மதுரை வந்திருந்தார். நேற்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் பத்மநாதன் மரணமடைந்தார்.
மறைந்த பத்மநாதன் அம்பாரை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி. ஆவார். 64 வயதாகும் இவரது உடலை இலங்கைக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக் கட்சியின் எம்.பியான அரியநேந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications