ரியாத்-உதவிக்காக காத்திருக்கும் தமிழரின் உடல்

Subscribe to Oneindia Tamil

ரியாத்: ரியாத்தில் மரணமடைந்த தமிழக தொழிலாளரின் உடலை தமிழகத்திற்கு அனுப்ப நிதியுதவி இல்லாததால், அங்கேயே காத்திருக்கிறது.

அறந்தாங்கியைச் சேர்ந்த லூர்துசாமி என்பவர் திடீர் மாரடைப்பால் 40 நாட்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளன.

அவரது உடல் சுமேசி மருத்துவமனையில் கடந்த 40 நாட்களாக உள்ளது. அவரது பாஸ்போர்ட்டை அவரது ஏஜென்ட் அரசிடம் ஒப்படைத்து விட்டார். விசாவும் காலாவதி ஆகி விட்டதால் உடலை சட்டப்பூர்வமாக கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டு எமர்ஜென்சி பாஸ்போர்ட், மற்றும் தேவையான உதவிகள் பெறப்பட்டு கேரளாவைச் சேர்ந்த சமுதாய ஆர்வலர் சிகாப் என்பவர் மூலம் லூர்துசாமியின் உடலை அனுப்பி வைப்பதற்குண்டான பணிகள் நடந்து வருகின்றன.

இருப்பினும் உடலை அனுப்பி வைப்பதற்கு பொருட் செல்வாகும். இதற்கு உதவ நினைப்போர் தனது மின்னஞ்சல் முகவரியை ([email protected]) தொடர்பு கொள்ளுமாறு ரியாத் தமிழ்ச் சங்கத் தலைவர் இம்தியாஸ் அஹமது கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+