For Daily Alerts
Just In
மகாராஷ்டிரா-நக்சல் தாக்குதலில்16 போலீஸார் பலி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், கட்சிலாரி மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய திடீர்த் தாக்குதலில் 16 போலீஸார் கொல்லப்பட்டனர்.
தவிதோலல் என்ற இடத்தில் இந்த பயங்கர சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது.
நக்சலைட்கள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்பட 16 போலீஸார் கொல்லப்பட்டனர்.
தனோரா என்ற இடத்திற்கு போலீஸார் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
கட்சிராலி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில்நடந்துள்ள 2வது நக்சலைட் தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தாக்குதலி்ல 15 போலீஸாரை, நக்சலைட்கள் சுட்டுக் கொன்றனர்.
Comments
Story first published: Friday, May 22, 2009, 14:57 [IST]