கருணாநிதியை அவமானப்படுத்தி விட்டது காங். - கோபத்தில் திமுக
டெல்லி: மூத்த தலைவரான கருணாநிதியை, காங்கிரஸ் தலைவர்கள் அவமரியாதை செய்து விட்டனர் என்று திமுக தரப்பு கோபத்தில் உள்ளது.
அமைச்சர் பதவிகளைப் பெறுவது தொடர்பாக யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையே கடும் இழுபறியாகி இப்போது வெளியிலிருந்து அரசுக்கு ஆதரவு என்ற முடிவுக்கு திமுக வந்து விட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் தரப்பில் கருணாநிதியை அவமரியாதை செய்து விட்டதாக திமுகவினர் கொந்தளித்துள்ளனர்.
கடந்த முறை வகித்த பதவிகளைத்தான் இந்த முறையும் கேட்டோம். அதைக் கொடுக்க முடியாது என்று கூறி விட்டனர்.
இதுதவிர புதிதாக பார்முலா ஒன்றையும் கூறினர். அதை எப்படி ஏற்க முடியும். கடந்த 2004ம் ஆண்டில் ஆட்சி அமைந்தபோது அப்படி ஒரு பார்முலாவும் முன் வைக்கப்படவில்லை.
நாங்கள் வகித்த துறைகளை வேறு கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவதாக கூறினால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், மிகவும் கறாராக நடந்து கொண்டு மூத்த தலைவரான கருணாநிதியை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் நடந்து கொண்டதாகவும் திமுக தரப்பு கோபமடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications