முகாம்களையும், போர் பாதித்த பகுதிகளையும் பார்வையிட மீடியாவை அனுமதித்த இலங்கை
வவுனியா: இலங்கைப் போரின்போது எந்தவித மீடியாவையும் உள்ளே விட மறுத்து வந்த இலங்கை அரசு நேற்றைய பான் கி மூன் பயணத்தின்போது மட்டும் மீடியாக்களை முகாம்களுக்கு செல்லவும், போர் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பான் பார்வையிட்டபோது அவருடன் செல்லவும் அனுமதித்து நல்ல பிள்ளை போல காட்டிக் கொண்டது.
தமிழர்கள் பகுதிகளில் மிக மிக மோசமான போரைத் தொடுத்த இலங்கை அரசு அப்பகுதிகளுக்கு செல்ல பத்திரிக்கையார்களுக்கு அனுமதி தரவில்லை. மேலும் இடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்களைப் போய்ப் பார்வையிடவும் மீடியாவை அனுமதிக்காமல் தடுத்து வந்தது.
ராணுவமும், அரசும் தரும் செய்திகளையும், அது தரும் படங்களையும் மட்டுமே பெற முடிந்தது. இதனால் உண்மை நிலவரம் வெளியுலகுக்குத் தெரியாமலேயே போய் விட்டது.
இந்த நிலையி்ல நேற்று பான் கி மூன் வந்தபோது, மீடியாக்களை தாராளமாக அனுமதித்து நல்ல பிள்ளை போல காட்டிக் கொண்டது இலங்கை அரசு.
பான் கி மூன் மானிக் பார்ம் முகாமுக்குப் போனபோது அவருடன் மீடியாவும் செல்ல அனுமதித்தது. அதேபோல ஹெலிகாப்டர் மூலம் போர் பாதித்த பகுதிகளைப் பான் கி மூன் பார்வையிட சென்றபோது மீடியாவுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications