நாடாளுமன்ற அதிமுக தலைவராக தம்பித்துரை தேர்வு - ராஜ்யசபாவுக்கு மைத்ரேயன்
சென்னை: அதிமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவராக தம்பித்துரை தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜ்யசபா கட்சித் தலைவராக டாக்டர் மைத்ரேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
அ.தி.மு.க. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில், அ.தி.மு.க. நாடாளுமன்ற குழு, மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்ற குழு தலைவர் - மு.தம்பிதுரை, துணைத் தலைவர் - டாக்டர் மைத்ரேயன்.
மக்களவை குழு தலைவர் - மு.தம்பிதுரை, துணைத் தலைவர் - செ.செம்மலை, கொறடா - ஓ.எஸ்.மணியன், பொருளாளர் - சி.ராசேந்திரன், செயலாளர் - டாக்டர் பி.வேணுகோபால்.
மாநிலங்களவை குழு தலைவர் - டாக்டர் மைத்ரேயன், துணைத் தலைவர் - கே.மலைச்சாமி, கொறடா - நா.பாலகங்கா, பொருளாளர் - எஸ்.அன்பழகன், செயலாளர் - என்.ஆர்.கோவிந்தராஜன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.