ஜூன் 15 முதல் மின்வாரியம் மூன்று அரசு கம்பெனிகளாக பிரிப்பு
மதுரை: தமிழ்நாடு மின்வாரியத்தை மூன்று அரசு கம்பெனிகளாக பிரித்து செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தை மூன்று அரசு கம்பெனிகளாக பிரிக்க, மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் இத் திட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், தற்போது டிரான்ஸ்மிஷன் கம்பெனி, மின் உற்பத்தி கம்பெனி, மின் விநியோக கம்பெனி என்ற பெயர்களில் மூன்று அரசு கம்பெனிகளாக மின்வாரியம் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று கம்பெனிகளும் ஜூன் 15-ம் தேதி முதல் செயல்பட தொடங்குகிறது.
இதற்காக இந்த கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்கள், பொறியாளர்கள், அதிகாரிகளுக்கு ஆகியோரை பிரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மின் வாரிய கம்பெனிகளின் பெரும்பான்மையான பங்குகளை அரசே வைத்து கொள்ள தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. ஒவ்வொரு கம்பெனிக்கும் நிர்வாக இயக்குநர் நியமனம் செய்வது, நிதி ஒதுக்குவது உட்பட அனைத்து பணிகளும் விரைவாக நடந்து வருவதாக மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications