மீண்டும் பரபர செய்திகளில் சத்யம் - 2 உயர் அதிகாரிகள் விலகல்
Subscribe to Oneindia Tamil

இந்த நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பிலுள்ள அதிகாரிகள் ஒவ்வொருவராக விலகத் துவங்கியுள்ளனர். இம்முறை சத்யம் பிபிஓ பிரிவின் சர்வதேச தலைமை அதிகாரி நரேஷ் ஜாங்கியானி, மனித வளத்துறை அதிகாரி வி சத்யானந்தம் ஆகியோர் விலகி விட்டனர்.
இவரைப் போலவே, சத்யம் பிபிஓவின் இன்னொரு முக்கிய அதிகாரி (மார்க்கெட்டிங்) குல்விந்தர் சிங்கும் ராஜினாமா செய்துவிட்டார்.
சத்யம் நிறுவனத்தில் 10,000 பணியாளர்கள் அதிகமாக உள்ளதாக அதன் சிஇஓ வினீத் நய்யார் நேற்று முன்தினம் அறிவித்ததைத் தொடர்ந்தே இத்தனை பேரும் சட்டென்று ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவர்களைப் போகச் சொல்லி நிர்வாகம் சொல்லவில்லை என்றும் அவர்களாகவே விலகிவிட்டனர் எனறும் சத்யம் அறிவித்துள்ளது.
மேலும் பல முக்கிய அதிகாரிகளும் பதவி விலகலுக்கு தயாராவதாக சத்யம் ஊழியர்கள் தரப்பில் தகவல் கசியவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications