விசைத்தறி பிரச்னைக்கு விரைவில் தீர்வு - கோவை எம்.பி. நடராஜன் உறுதி
பல்லடம்: விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. நடராஜன் உறுதி கூறினார்.
கோவை எம்.பி நடராஜனை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க பல்லடம் வருகை தந்தார். அப்போது, பல்லடம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா தலைவர் செந்தில்குமார், இயக்குநர்கள் வேலுசாமி, குமாரசாமி ஆகியோர் அவரை சந்தித்து பேசினர்.
அப்போது, விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகளை விரைவில் தீர்க்க கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நடராஜன், பல்லடத்தில் கோழிப் பண்ணைகள் அதிகம் இருப்பதால் கோழிகளை பரிசோதனை செய்ய நவீன ஆய்வுக் கூடம் அமைக்கப்படும்.
அத்திகடவு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் வசதி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.பி. நடராஜன் உறுதி கூறினார்.