மன்மோகன் அமைச்சரவையில் மாமனார்-மருமகன்!
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில், மாமனாரான பரூக் அப்துல்லாவும், அவரது மருமகனான சச்சின் பைலட்டும் இடம் பெற்றுள்ளனர்.
மாமனார் பரூக் அப்துல்லா கேபினட் அமைச்சராகியுள்ளார். சச்சின் பைலட் இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
72 வயதாகும் பரூக் அப்துல்லாவின் மகள் சாராவைத்தான் 32 வயதாகும் சச்சின் பைலட் மணந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சச்சின் பைலட். பரூக் அப்துல்லா ஸ்ரீநகர் தொகுதியிலிருந்து தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இன்று நடந்த பதவியேற்பு விழாவின்போது பரூக் அப்துல்லா முதலில் பதவியேற்றார். அவர் பதவியேற்று ஒரு மணி நேரம் கழித்து சச்சின் பைலட் பதவியேற்றுக் கொண்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் பைலட்டின் மகன்தான் சச்சின் பைலட்.
தந்தையும், மச்சானும் பதவியேற்றுக் கொண்டதை, ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வரும், பரூக்கின் மகனுமான உமர் அப்துல்லா பெருமை பொங்க பார்த்து ரசித்தார்.
பதவியேற்புக்கு முன்பாக பரூக், உமர், சச்சின் மூவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி மீடியாக்களுக்கு போஸ் கொடுத்தனர்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குடும்ப அரசியல்தான் ...