துணை முதல்வரானார் மு.க.ஸ்டாலின்-ஆளுநர் அறிவிப்பு!

இதுவரை முதல்வர் கருணாநிதி கவனித்து வந்த பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள், தொழில், சிறுபான்மை நலம், பாஸ்போர்ட், சமூக சீர்திருத்தம் ஆகிய துறைகளை இனிமேல் ஸ்டாலின் கவனிப்பார் என்றும் ஆளுநர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் பதவியில் அமர்த்தப்படுவார் என சமீப காலமாக பேச்சு அடிபட்டு வந்தது.
இந் நிலையில் இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், கடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஏற்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படுகிறார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி அளித்த பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளது. விரைவில் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராகப் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக...
தமிழகத்தில் இதுவரை துணை முதல்வராக யாரும் பதவி அமர்த்தப்பட்டதில்லை.
இந் நிலையில் தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
உடல் நலம் காரணமாக விரைவில் ஸ்டாலினிடம் தனது பொறுப்பை ஒப்படைத்து விட்டு முதல்வர் கருணாநிதியே பதவி விலகக் கூடும் எனவும் பேச்சு அடிபட்டு வருகிறது. இந்த நிலையில், ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications