ஈரோட்டில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோட்டில் உள்ள தோல் தொழிற்சாலையில் ஒன்றில் விஷவாயு தாக்கியதை அடுத்து மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோட்டில் நூற்றுக்கணக்கான தனியார் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இதில் ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் தோல் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வந்தது.
அப்போது பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் தொட்டிக்குள் தவறி விழந்தார். இதையடுத்து அவரை காப்பாற்ற அருகிலிருந்த சக தொழிலாளிகள் சிலர் தொட்டிக்குள் இறங்கினர்.
கழிவு தொட்டிக்குள் இருந்த விஷவாயு திடீரென வெளியாகி தாக்கியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications