சேது சமுத்திரத் தி்ட்டம் நிறைவேற்றப்படும்-வாசன்

அமைச்சர் பொறுப்பேற்ற பின் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்தின் கனவுத் திட்டம். தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் மிக மிக முக்கியமான திட்டம் இது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியி்ல் இத்திட்டம் முக்கிய பங்காற்றும். இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அரசு காத்திருக்கிறது.
இத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆர்.கே.பச்செளரி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டியின் அறிக்கைக்காக உச்ச நீதிமன்றம் காத்திருக்கிறது
அரசியல் நோக்கத்துடன் பார்க்காமல் பொருளாதார வளர்ச்சியை மனதில் கொண்டு இத்திட்டத்தை பார்க்க வேண்டும்.
துறைமுகங்களை நவீனப்படுத்துதல், சரக்குகளை விரைவில் இறக்கி ஏற்றி அனுப்புதல், துறைமுகங்களில் பெரிய கப்பல்கள் வந்துபோவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும். கப்பல் கட்டும் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications