தெற்கு-கிழக்கில் 300 மனித வெடிகுண்டுகள் ஊடுறுவல்: பொன்சேகா

விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசும், ராணுவமும் கூறி வரும் போதிலும், சரத் பொன்சேகாவுக்கு இன்னும் புலிகள் குறித்த சந்தேகம் இருக்கிறது. இதைத்தான் அவரது சமீபத்திய பேட்டிகள் வலியுறுத்தி வருகின்றன.
விடுதலைப் புலிகள் இன்னும் செயல்பாட்டில்தான் உள்ளனர். ஆனால் தற்காலிகமாக அவர்கள் உறங்கு நிலையில் உள்ளனர். கொரில்லாத் தாக்குதலில் அவர்கள் ஈடுபடலாம் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் ஊடுறுவியிருப்பதாக தற்போது அவர் தெரிவித்துள்ளார். மேலும், தெற்கு, கிழக்கு மாகாணங்களில் 300 தற்கொலைப் படை வீரர்கள் ஊடுறுவியிரு்பபதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
இலங்கை கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விடு தலைப்புலிகள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். இதற்காக தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் 300 தற்கொலைப் படையினர் இலங்கையின் பல பகுதிகளில் ஊடுருவி இருக்கலாம் என்று தகவல் வந்துள்ளது. எனவே ராணு வத்தை உஷார்படுத்தி உள்ளோம்.
வடக்கு பகுதியில் கூடுதல் ராணுவ படையை நிரந்தரமாக வைக்க இயலாது. மற்ற பகுதி அச்சுறுத்தல்களை ராணுவம் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. எனவே வடக்கு மாகாணத்தில் உள்ள ராணுவம் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
வடக்கில் உள்ள தமிழ் இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். வடக்குப் பகுதி தமிழ் இளைஞர்களுக்கு அப்பகுதிகள் மிகவும் நன்றாகப் பரிச்சயமானவை என்பதால் அவர்களை பணியில் அமர்த்துவது இலகுவாக இருக்கும்.
கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் அந்தப் பிரதே பாதுகாப்புப் பணியில் 800 தமிழ் இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சகல இனத்தவரும் இணைந்து இலங்கை ராணுவத்தில் சேர்ந்தும், ராணுவத்துடன் இணைந்தும், தாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றார் பொன்சேகா.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications