For Daily Alerts
Just In
மோசடி: ரேஞ்சர் டிஸ்மிஸ்-வன அலுவலர் சஸ்பெண்ட்
ஆத்தூர்: காடு வளர்ப்புத் திட்டத்தில் மோசடி செய்த வனச் சரகர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பணியில் அலட்சியம் காட்டிய வன கோட்ட அலுவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆத்தூர் இடைவடுகாடு வனச்சரகத்தில் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவி செய்யப்பட்டது.
இந்த நிதியுதவியை கொண்டுக் தடுப்பணை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதில் ரூ. 7லட்சம் மோசடி செய்ததாக ரேஞசர் கல்யாணசுந்திரம் மீது புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் பணிகள் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் ரூ.6.90 லட்சம் மோசடி செய்தது கண்டறிந்தனர். இதனையடுத்து ரேஞ்சர் கல்யாணசுந்தரம் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
மேலும் இந்த மோசடி குறித்த புகாரினை ஆய்வு செய்யாமல் அலட்சியம் செய்ததற்காக ஆத்தூர் இடைவடுகாடு வன கோட்ட அதிகாரி முத்துசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Comments
Story first published: Saturday, May 30, 2009, 12:39 [IST]